சர்வதேச கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில், டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு அவரின் வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நேற்று டிரம்ப் மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள தனது கோல்ப் கிளப்பில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தொலைவில் துப்பாக்கி சூடு நடந்தது. பின்னர் அவர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த தகவலை டிரம்ப் பிரசார அமைப்பின் செய்தி தொடர்பாளரான ஸ்டீவன் சீயங் தெரிவித்தார். ஆனால், விவகாரத்துடன் தொடர்புடைய தகவல்கள் வெளியிடப்படவில்லை.