டிரம்ப் தலைமையில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதம், டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கின்றார். ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையை கடந்தவர்களை நாடு கடத்தி, மெக்ஸிகோவுடனான எல்லையை உறுதி செய்வேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன் பின்னர், டிரம்ப் தலைமையில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது. அந்த பதிவுக்கு பதிலளித்த டிரம்ப், இது உண்மை என ஒப்புக்கொண்டார். அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி சட்டவிரோத குடியிருப்பாளர்கள் உள்ளனர். டிரம்பின் நாடு கடத்தல் நடவடிக்கை 2 கோடி குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் என்று கணக்கிடப்படுகிறது.