டொனால்ட் ட்ரம்ப் நிறுவனங்கள் வரி மோசடி செய்தது நிரூபணம்

December 7, 2022

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிறுவனங்கள் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது நிரூபணம் ஆகி உள்ளது. டொனால்ட் ட்ரம்பின் தி டிரம்ப் கார்ப்பரேஷன் மற்றும் டிரம்ப் பேரோல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மேன்ஹாட்டன் நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளை ஏமாற்றும் விதமாக, 15 வருட திட்டம் என்ற பெயரில் போலி வணிக ஆவணங்களை இந்த நிறுவனங்கள் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில், டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரடியாக சம்பந்தப்படவில்லை […]

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிறுவனங்கள் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் தி டிரம்ப் கார்ப்பரேஷன் மற்றும் டிரம்ப் பேரோல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மேன்ஹாட்டன் நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளை ஏமாற்றும் விதமாக, 15 வருட திட்டம் என்ற பெயரில் போலி வணிக ஆவணங்களை இந்த நிறுவனங்கள் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில், டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும், அவர்களுக்கு இதில் தொடர்பு இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி டிரம்ப் ஆர்கனைசேஷன் நிறுவனத்திற்கு 1.61 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ஜனவரி மாதத்தில், இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது, நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu