ஜப்பான் மற்றும் தென்கொரியாவைச் சேர்த்துப் பல நாடுகளுக்கு எதிராக வரியை உயர்த்த உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார், பதிலடி வந்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஜப்பான், தென்கொரியா, மியான்மர், மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். குறிப்பாக ஜப்பான், தென்கொரியாவுக்கான வரி 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்த நாடுகள் தங்கள் இறக்குமதி வரியை உயர்த்தினால், அமெரிக்காவும் மீண்டும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முடிவை தொடர்புடைய நாடுகளுக்கு கடிதமாக அனுப்பி, அதன் நகலையும் வெளியிட்டுள்ளார். வரிவிதிப்பை தற்காலிகமாக ஜூலை 9 வரை நிறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.