நாகர்கர்ணூலில் சுரங்கப்பாதையில் விபத்து

February 25, 2025

தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 30 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். தெலுங்கானாவின் நாகர்கர்ணூல் மாவட்டம் அம்ராபாத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த 30 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சிக்கிய தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். நாகர்கர்ணூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் […]

தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 30 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

தெலுங்கானாவின் நாகர்கர்ணூல் மாவட்டம் அம்ராபாத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த 30 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சிக்கிய தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். நாகர்கர்ணூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாகர்கர்ணூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறியதாவது: "ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தின் இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளன. எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக் குழுவினர் வந்த பின்பு நிலைமை குறித்த விவரங்கள் தெளிவாக வரும்" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu