பேரிடர் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக டிவிஎஸ் நிறுவனம் வெள்ள நிவாரண நிதி வழங்கியுள்ளது.
புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்காக பல்வேறு துறை அலுவலர்கள், நல்ல உள்ளங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். மேலும் இயற்கை பேரிடர்களிருந்து மீள்வதற்காக கூடுதல் ஆதாரங்களை திரட்ட வேண்டியது அவசியம் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து மிச்சங் நிவாரண நிதி பணிகளுக்காக டிவிஎஸ் நிறுவனம் 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதனை டி வி எஸ் நிறுவன தலைவர் வேலு சீனிவாசன் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து வழங்கினார்.