டுவிட்டரில் தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவை நீக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தடுப்பு மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அம்சம் கொண்ட சேவை ஒன்றை டுவிட்டரானது நீக்கியுள்ளது. மஸ்க்கின் உத்தரவின் பேரிலேயே இது செயல்படுத்தப்பட்டு உள்ளது என டுவிட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி #ThereIsHelp என்ற சேவை நீக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மனநலம், எச்.ஐ.வி., தடுப்பூசிகள், குழந்தை பாலியல் சுரண்டல், கொரோனா பெருந்தொற்று, பாலின அடிப்படையிலான வன்முறை, இயற்கை பேரிடர்கள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுடன் தொடர்புடைய சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களை தொடர்பு கொள்வதற்கான குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ள இந்த ஹேஷ்டேக் பயனளித்து வந்தது.
இந்த சேவை கடந்த 2 நாட்களாக டுவிட்டரில் இல்லாதது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விசயத்தில் நம்பர் ஒன் முக்கியத்துவம் என கூறி விட்டு, இந்த நடவடிக்கையை மஸ்க் எடுத்துள்ளார்.