ட்விட்டரில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத 150 கோடி கணக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில், பல ஆண்டுகளாக எந்த பதிவுகளும் செய்யாத கணக்குகள் மற்றும் ட்விட்டரில் உள் நுழைவு (Login) செய்யப்படாத கணக்குகள் ஆகியவற்றை நீக்க உள்ளதாக, எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால், ட்விட்டரில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு குறையும் என்று கூறப்படுகிறது. எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.