ஆப்கானிஸ்தானில் சுமார் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பைசாபாத் மாகாணத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று நள்ளிரவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக உள்ளது. இதனைத் தொடர்ந்து அரை மணி நேர இடைவெளிக்கு பின் பைசாபாத் மாகாணத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் 140 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.8 என்ற ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களும், வீடுகளும் குலுங்கின. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.