போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி சோகத்தில் முடிந்துள்ளது. நடுவானில் விமானங்கள் மோதி கொண்டதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
போர்ச்சுகலில் உள்ள பெஜா விமான நிலையத்தில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிய ரக விமானங்கள், ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை அசாத்திய முறையில் இயக்கி விமானிகள் சாகசத்தில் ஈடுபட்டனர். பார்வையாளர்களின் கண்ணைக் கவரும் வகையில் பல்வேறு சாகசங்கள் அமைந்தன. துரதிஷ்டவசமாக, சாகசத்தின் போது 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விமானி காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக சாகச நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. விமானியின் மறைவுக்கு விமானப்படை சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.