நீரவ் மோடி பாங்க் ஆஃப் இந்தியாவிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்க உத்தரவு

March 12, 2024

வைர வியாபாரி நீரவ் மோடி பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்க வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி கடன் வாங்கி, பின்னர் அதை திருப்பிச் செலுத்தாமல் 2018-ல் லண்டனுக்கு தப்பி சென்றார். இதனால் அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தன. இது குறித்து லண்டனில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் […]

வைர வியாபாரி நீரவ் மோடி பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்க வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி கடன் வாங்கி, பின்னர் அதை திருப்பிச் செலுத்தாமல் 2018-ல் லண்டனுக்கு தப்பி சென்றார். இதனால் அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தன. இது குறித்து லண்டனில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது அவர் தேம்சைடு சிறையில் உள்ளார். அவர் முன்னதாக தனக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைரஸ் டைமண்ட் நிறுவனத்துக்காக பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் 90 லட்சம் டாலர் கடன் பெற்றிருந்தார். அதனை 2018-ல் செலுத்துவதாக கூறி பின்னர் வாக்குறுதியை காப்பாற்றாமல் ஏமாற்றினார்.

இந்நிலையில், லண்டன் உயர்நீதிமன்றத்தில் பாங்க் ஆப் இந்தியா மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் நீரவ் மோடிக்கு சொந்தமான துபாய் நிறுவனத்தின் மூலமாக தங்களுக்கு சேர வேண்டிய தொகையை மீட்டு தரும்படி கோரிக்கை வைத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த லண்டன் உயர்நீதிமன்றம் மோடிக்கு சொந்தமான எந்த ஒரு நிறுவனத்தையும் ஏலம் விட்டு அல்லது விற்று தங்களுக்கு வேண்டிய தொகையை வங்கி மீட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu