சரணடைந்த உக்ரைன் வீரர்களை ரஷியா சுட்டுக் கொன்றதற்கு எதிரான நடவடிக்கைகளை சா்வதேச அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைனின் மனித உரிமைகள் தூதர் டிமிட்ரோ லுபிநெட்ஸ் வலியுறுத்தினார்.
சமீபத்தில், ரஷியாவில் உள்ள கூர்ஸ்க் பிராந்தியத்தில் 9 உக்ரைன் வீர்கள் சரணடைந்ததாகவும், அவர்களை ரஷிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லுபிநெட்ஸ் தெரிவித்தார். சரணடைந்தவர்களை கொன்று ரஷியா மேலும் ஒரு குற்றத்தை செய்துள்ளது என குற்றஞ்சாட்டினார். இதுவரை ரஷிய அதிகாரிகள் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.