மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா முறியடித்ததாக அறிவித்துள்ளது.
மாஸ்கோ பகுதியில் உக்ரைனை சேர்ந்த 24 ட்ரோன்களை ரஷ்யயா சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாஸ்கோ ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால் மூன்று கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறினார். எனினும் மாஸ்கோவில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் துலா நகரில் குடியிருப்பில் ஒரு ட்ரோன் தாக்கி சிலர் காயம் அடைந்ததாக ரஷ்ய சேனல்கள் கூறியுள்ளன. இந்த தாக்குதல் அபாயம் காரணமாக மாஸ்கோவில் இரு விமான நிலையங்கள் சிறிது நேரம் மூடப்பட்டது. பின்னர் அவை இயங்கின என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. முன்னதாக சனிக்கிழமை உக்ரைன் மீது 75 ட்ரோன்களை ரஷ்யா தாக்கியது.