ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், அந்த நாட்டின் எண்ணெய்க் கிடங்கொன்று கொழுந்து எரிந்து கொண்டதாக ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், ரஷியாவின் கிரோவ் பிராந்தியத்தில், கோட்டல்நிச் பகுதியில் அமைந்த எண்ணெய்க் கிடங்கில் நடத்தப்பட்டது. இதில் அந்த எண்ணெய் கிடங்கு கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலிருந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.