மத்திய அமைச்சரவை, 'ஒரே நாடு ஒரே சந்தா' (ONOS) திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவில், "ஒரே நாடு ஒரே சந்தா" (ONOS) என்ற திட்டத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மூலம், இந்தியா முழுவதும் உள்ள அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இலவசமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பல்வேறு சர்வதேச ஆராய்ச்சி இதழ்களுக்கு முழுமையான டிஜிட்டல் அணுகல் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில், 6,300 அரசு உயர்கல்வி நிறுவங்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி அமைப்புகளுக்கு இந்தச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. 2025-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டின் வரை இந்த திட்டம் நடைமுறைக்கு வரும். இதன் மூலம், இந்தியாவின் 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முயற்சி, உலகளவில் கற்றல் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு உகந்த உதவி வழங்கும்.