மத்திய மந்திரி சபை நாளை மாற்றம் - கூட்டணி கட்சிகளுக்கு பதவி

மத்திய மந்திரிகள் சபை நாளை மாற்றி அமைக்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் மத்திய மந்திரிகள் சபையை மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் மோடி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் 2 ஆண்டு கால ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், மத்திய மந்திரிகளின் பங்களிப்பு, தொகுதி மேம்பாட்டு நிதி, வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் கட்சியின் எதிர்கால நலன் குறித்தும் அவர் விரிவாக ஆய்வு செய்தார். இதில் திறமையாக […]

மத்திய மந்திரிகள் சபை நாளை மாற்றி அமைக்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதால் மத்திய மந்திரிகள் சபையை மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் மோடி பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் 2 ஆண்டு கால ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள், மத்திய மந்திரிகளின் பங்களிப்பு, தொகுதி மேம்பாட்டு நிதி, வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் கட்சியின் எதிர்கால நலன் குறித்தும் அவர் விரிவாக ஆய்வு செய்தார். இதில் திறமையாக செயல்படும் மந்திரிகளுக்கு கேபினட் அந்தஸ்து அளிக்க பிரதமர் மோடி முடிவு செய்து இருக்கிறார்.

நிதி, வெளியுறவுத்துறை, பாதுகாப்பு, உள்துறை ஆகிய இலாகா மந்திரிகள் மாற்றம் செய்யப்பட மாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் மந்திரி சபையில் தற்போது பிரதமர் உள்பட 66 பேர் உள்ளனர். அரசியலமைப்பின்படி மந்திரிசபையில் 82 பேர் இடம்பெறலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu