கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் இந்திய மருத்துவ சங்கத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று இந்திய மருத்துவ சங்கத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது. கூட்டத்தில் நாட்டில் தற்போதைய கரோனா நிலவரம் மற்றும் கரோனா பரவலை எதிர்கொள்ள எவ்வளவு தூரம் நாடு ஆயத்தமாக இருக்கிறது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
சீனாவில் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில் சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் ஆர்டி பிசிஆர் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே. நந்திகூரி தெரிவித்துள்ளார்.