யுபிஎஸ்சி தலைவராக இருக்கும் மனோஜ் சோனி தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்பு ராஜினாமா செய்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் உறுப்பினராக கடந்த 2017 ஆம் ஆண்டு மனோஜ் சோனி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி அணி தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ள நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இவரது ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்கப்படவில்லை.
தற்போது பயிற்சி ஐஏஎஸ் பூஜா ஹட்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் இந்நிலையில் இவர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும் போலீஸ் சான்றிதழ் விவகாரத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.