அமெரிக்க ராணுவம் பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லா மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமெரிக்கா பணியாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கான உத்தரவை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பிறப்பித்தார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க பணியாளர்கள் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. பணியாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது என்று பாதுகாப்பு செயலர் ஆஸ்டின் கூறினார். இன்று காலை ஹிஸ்புல்லா தொடர்புடைய மூன்று இடங்களில் அமெரிக்க ராணுவம் குண்டு வீசியது. காசா போர் தொடங்கிய பின்பு அமெரிக்க படைகள் ஈராக் மற்றும் சிரியாவில் நிலை கொண்டுள்ளது.