கலிபோர்னியாவில் வசித்து வந்த இந்திய குடும்பத்தினர் 4 பேர் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் சுஜித் ஹென்றி, அவரது மனைவி ஆலிஸ் பிரியங்கா மற்றும் 4 வயதான அவர்களது இரட்டைக் குழந்தைகள் ஆகியோர் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் தெரிவித்துள்ள தகவலின்படி, இரண்டு பேரின் உடல்களில் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளன. எனவே, இது தற்கொலையா இல்லை கொலையா என்று கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினர், கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் ஏசி மற்றும் ஹீட்டர் ஆகியவற்றில் கோளாறு இருந்ததாக குடும்பத்தினர் புகார் அளித்ததாகவும், அதனால் வாயு கசிந்து உயிரிழந்திருக்கலாம் எனவும், கூறுகின்றனர். ஆனால், காவல்துறையினர் விசாரித்ததில் வீட்டுக்குள் எந்த வாயு கசிவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தொடர்ச்சியாக மரணித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.