சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில், ஒபன் ஏஐ நிறுவனத்தில் தனது ஆராய்ச்சியால் முறைகேட்டை வெளிப்படுத்திய இந்திய-அமெரிக்க ஆராய்ச்சியாளர் சுச்சீர் பாலாஜி, கடந்த நவம்பர் 26 ஆம் தேதி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுச்சீர் பாலாஜி, சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை வடிவமைக்க ஒபன் ஏஐ-யில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் அமெரிக்க பதிப்புரிமைச் சட்டத்தை மீறிய முறைகேட்டில் ஒபன் ஏஐ ஈடுபட்டதாக கூறி ராஜினாமா செய்தார். அவர் இதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் நவம்பர் 26-ஆம் தேதி, அவரது நண்பர்களின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.