இலங்கை தலைநகரில் அதானி குழுமத்தின் முக்கிய துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில், அமெரிக்கா 553 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க, அமெரிக்காவின் முக்கிய நகர்வாக இந்த முதலீடு கூறப்படுகிறது. கௌதம் அதானி அமைத்து வரும் இலங்கை துறைமுகத்திற்கு, அமெரிக்கா நிதி அளிக்க உள்ளது. இது, தெற்காசிய பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கவும், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்தவும் உதவும் என கருதப்படுகிறது. அதே சமயத்தில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய திட்டங்களுக்கு துணைபுரிவதாக அமெரிக்கா உறுதியளித்ததன் பகுதியாக, இந்த முதலீடு செய்யப்படுவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.