உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.
உக்ரைன் போரில் வெற்றி பெற மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாக சென்று உதவிகளை நாடி வருகிறார் ஜெலன்ஸ்கி. உலக நாடுகளில் இருந்து ரஷ்யாவை தனித்துவிட பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இவர்கள் இருவரும் இந்த சந்திப்பின்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அதிபர் ஜெலன்ஸ்கி ஜோ பைடனை சந்திப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கனடா ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் கருத்து தெரிவித்திருந்தது இருந்தது. இந்த நிலையில் ஜெலன்ஸ்கி கனடா செல்ல உள்ளார்.