உக்ரைன் இணைப்பு காரணமாக ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்படும் -அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

October 1, 2022

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை இணைப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடுமையான செய்தியை வழங்கியுள்ளார். ரஷ்யா நான்கு உக்ரேனிய பகுதிகளை இணைக்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவானது, ரஷ்ய ஆயுத விநியோக நெட்வொர்க் உட்பட 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இது பற்றி ௯றிய ஜனாதிபதி பிடன் , அமெரிக்காவும் அதன் […]

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை இணைப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடுமையான செய்தியை வழங்கியுள்ளார்.

ரஷ்யா நான்கு உக்ரேனிய பகுதிகளை இணைக்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவானது, ரஷ்ய ஆயுத விநியோக நெட்வொர்க் உட்பட 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இது பற்றி ௯றிய ஜனாதிபதி பிடன் , அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களால் பயப்படப் போவதில்லை என்றும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கும் என்றும் ௯றினார்.

இதற்கிடையில், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளனர். ரஷ்யாவின் கடல் எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு வரம்பு நிர்ணயிக்க உள்ளனர். அது புட்டின் கோரக்கூடிய விலைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu