உக்ரைனுக்கு மேலும் 275 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்குகின்றன. பல நாடுகள் போர் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் போர் தொடர்கிறது.
ரஷியாவை தாக்குவதற்காக, உக்ரைனுக்கு தொலைதூர ஏவுகணைகளை அளிக்க அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி வழங்கியுள்ளார். இதன் பின்னர், ரஷியா அணு ஆயுத பயன்பாடு தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. அதேவேளை, உக்ரைனுக்கு மேலும் 275 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகள் வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.