காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால், இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
காசாவில் போர்நிறுத்தம் ஏற்படுத்தி, அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என சர்வதேச நாடுகள் இஸ்ரேல் அரசிடம் வலியுறுத்துகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்காமல் போர்நிறுத்தம் ஏற்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால், இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளிங்கன் இஸ்ரேல் அரசுக்கு எழுதிய கடிதத்தில், காசாவின் நிலைமையில் விரைவான மாற்றம் வேண்டும் என கூறியுள்ளார்.