விஜயவாடா-சென்னை புதிய வந்தே பாரத் ரெயிலை 7-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 8-ந்தேதி முதல் பயணிகள் ரெயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விஜயவாடாவில் இருந்து கூடூர், ரேணிகுண்டா, வழியாக சென்னைக்கு வந்து அடைகிறது. இதே மார்க்கத்தில் சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. விஜயவாடாவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில் சென்னையை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.