இன்று முதல் சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 31ம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50க்கு புறப்பட்டு மைசூருக்கு அதே நாள் மதியம் 12:20 மணிக்கு சென்றடையும். அதன் மறு மார்க்கமாக அதே தேதி மைசூரில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு அதே நாள் இரவு 7.20 மணிக்கு வந்தடையும். இதே போல வரும் 7 மற்றும் 14-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டையம் புறப்படும் அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது. மறு மார்க்கமாக 8 மற்றும் 15ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 8:45ற்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 10:30 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.