கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் சுமார் 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. இதன் 15ஆவது சேவையாக திருவனந்தபுரம்-காசர்கோடு வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே 586 கி.மீ. தூரத்தை கடக்கும். திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர் செல்ல இந்த ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்களை எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.