சென்னையில் 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம்

November 7, 2022

சென்னை சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் மைசூரு இடையே 'வந்தே பாரத்' ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை நடைபெறுகிறது. மைசூரு- சென்னை சென்ட்ரல் இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை வரும் 11-ம் தேதி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எப்.,பில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரயில்வேயிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை […]

சென்னை சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் மைசூரு இடையே 'வந்தே பாரத்' ரயிலின் சோதனை ஓட்டம் இன்று காலை நடைபெறுகிறது.

மைசூரு- சென்னை சென்ட்ரல் இடையே 'வந்தே பாரத்' ரயில் சேவை வரும் 11-ம் தேதி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எப்.,பில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரயில்வேயிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 5:50 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக பெங்களூருவை காலை 10:25 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு நண்பகல் 12:30 மணிக்கு மைசூரை சென்றடையும். மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இன்று மதியம் 1:05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை இரவு 7:35 மணிக்கு வந்தடையும்.

இந்த சோதனை ஓட்டத்தின் போது ரயிலின் வேகம் அதிகரித்து சோதிக்கப்படும். இந்த ரயில் சோதனை ஓட்டத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மால்யா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu