வாரணாசி ஞானவாபி மசூதி பலத்த பாதுகாப்புடன் ஆய்வு

August 4, 2023

உத்தரபிரதேச மாநில வாரணாசியில் உள்ள மசூதி இந்து கோவிலில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த வழக்கை தொடர்ந்து இன்று அங்கு ஆய்வு செய்யப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி இந்து கோவில் மீது கட்டப்பட்டுள்ளதாக ஐந்து பெண்கள் அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து அந்த மசூதியில் அறிவுபூர்வமாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்டமும், அலகாபாத் ஐகோர்ட்டும் ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யலாம் என உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு […]

உத்தரபிரதேச மாநில வாரணாசியில் உள்ள மசூதி இந்து கோவிலில் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த வழக்கை தொடர்ந்து இன்று அங்கு ஆய்வு செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஞானவாபி மசூதி இந்து கோவில் மீது கட்டப்பட்டுள்ளதாக ஐந்து பெண்கள் அலகாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து அந்த மசூதியில் அறிவுபூர்வமாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்டமும், அலகாபாத் ஐகோர்ட்டும் ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யலாம் என உத்தரவிட்டது.

அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு தொல்லியல் துறையினர் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொள்ள 41 பேர் கொண்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து இந்த ஆய்வை ஞானவாபி மசூதியில் தொடங்கினர். இதற்கு முதலாக ஆய்வு செய்த தொல்லியல் துறை அங்கு சிவலிங்கம் இருப்பதாக கூறியிருந்தன. இப்பொழுது அந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டு இருப்பதால் அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் ஆய்வை மேற்கொண்டனர். பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவில் வாரணாசி கமிஷனர், மேஜிஸ்திரேட் மற்றும் துணைநிலை ராணுவத்தினர் ஆகியோரைக் கொண்டு ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வு பணியை இஸ்லாமிய கமிட்டி உறுப்பினர்கள் எதிர்த்தனர். மதியம் 12 வரை சுமார் 5 மணி நேரம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மசூதியில் இனி ஆய்வு செய்யக்கூடாது என டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu