இந்தியாவின் புதிய வரி விதிப்பு விதிகளை, தங்கள் நிறுவனத்தில் ஏற்றுக் கொண்டதன் விளைவாக, வேதாந்தா நிறுவனத்தின் இழப்பு உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேதாந்தா நிறுவனத்தின் மொத்த வருவாய் 39585 கோடி ஆகும். மேலும், நிறுவனத்தின் நிகர இழப்பு 1783 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது புதிய வரி விதிப்பு முறைகளை கிரகித்துக் கொண்டதன் விளைவாக நிகழ்ந்துள்ளதாக வேதாந்தா நிறுவனம் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இது இந்த முறை மட்டுமே பதிவாகும் இழப்பு என்றும், மீண்டும் வேதாந்தா நிறுவனம் லாபத்தை பதிவு செய்யும் எனவும், கூறப்படுகிறது.