வேதாந்தா குழுமத்தின் ஜிங்க் இன்டர்நேஷனல் சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க்கிற்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 2981 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பணத்திற்கு இந்த சொத்துக்களை விற்க வேதாந்தா குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வேதாந்தா குழுமம், பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் இயங்கும் 69.6% பிளாக் மவுண்டெய்ன் மைனிங் பங்குகள் மற்றும் நமீபியாவில் இயங்கும் 100% ஜிங்க் நமீபியா பங்குகள் ஆகியவை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளன. தற்போதைய நிலையில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் 64.92% பொது பங்குகள் வேதாந்தா குழுமத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பங்குகள் கை மாற்றப்படுவது 18 மாத காலங்களில் படிப்படியாக நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.