வானில் விரைவில் ஒரு அழகான திகைப்பு காட்சியாக வெள்ளி (வீனஸ்) கிரகம் பிரகாசமாகத் தெரிந்திருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை, ஏப்ரல் 24-ஆம் தேதி வெள்ளி கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்ததனால், அதிகமான வெளிச்சத்துடன் வானில் தென்படும். இந்த நேரத்தில் அது 4.4 மேக்னிட்யூட் அளவிலான பிரகாசத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அரிய தருணத்தை காண விரும்பும் பொதுமக்கள், நாளை சூரிய உதயத்திற்கு முன் வானை நோக்கி பார்த்தால், நிலவுக்கு அருகில் வெள்ளி கிரகத்தை எளிதாக காண முடியும்.
வெள்ளியின் இந்த பிரகாசமான தோற்றம் மீண்டும் செப்டம்பர் மாதம் தான் மீண்டும் காணக்கூடியதாகும். எனவே, இந்த வாய்ப்பை தவறவிடாமல் பொதுமக்கள் வானை நோக்கி ரசிக்க வானிலை வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.