விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது

திமுக விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடை தேர்தலில் நடைபெற வேண்டிய பணிகளை கவனிக்க தேர்தல் பணி குழுவை அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் உயிரிழந்ததை அடுத்து விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் […]

திமுக விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடை தேர்தலில் நடைபெற வேண்டிய பணிகளை கவனிக்க தேர்தல் பணி குழுவை அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் உயிரிழந்ததை அடுத்து விக்ரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி வருகின்ற ஜூலை 10ஆம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது மட்டும் இன்றி திமுக சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு அறிவிக்கப்பட்டுள்ளது.அதில் பொன்முடி,எஸ். ஜெகத்ரட்சகன்,மாண்புமிகு கே.என் நேரு,எ.வா வேலு,எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்,அர.சக்கரபாணி ,தா. மோ. அன்பரசன்,எஸ்.எஸ் சிவசங்கர்,சி.வி கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu