கனடாவில் விசா சேவை மீண்டும் தொடக்கம்

October 26, 2023

கனடாவிற்கான விசா சேவையை இந்தியா கடந்த மாதம் 21ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டார். இதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பு உள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா கனடா இடையே விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்திய தூதர் கனடாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. அதன் எதிரொலியாக 21ஆம் தேதி முதல் கனடா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு வழங்கப்படும் விசா அனுமதியை தற்காலிகமாக இந்தியா […]

கனடாவிற்கான விசா சேவையை இந்தியா கடந்த மாதம் 21ஆம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டார். இதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பு உள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இதனால் இந்தியா கனடா இடையே விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்திய தூதர் கனடாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. அதன் எதிரொலியாக 21ஆம் தேதி முதல் கனடா நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் கனடா குடிமக்களுக்கு வழங்கப்படும் விசா அனுமதியை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியது. கனடா மக்களுக்கான விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக விசா சேவை மையங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வருவது தொடர்பான சேவைகளுக்கு விசா வழங்குவது மீண்டும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டொரன்டோ மற்றும் வாங்கூவரிலுள்ள துணை தூதரகங்களில் விசா சேவைகள் தொடங்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu