வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நேற்று கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், நாடு முழுதும் தன்னார்வ அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஆக., 1 முதல் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஆனால், இது கட்டாயம் அல்ல.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப் படாது. நாடு முழுதும் உள்ள 95 கோடி வாக்காளர்களில் 54 கோடி பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். என்றாலும், இது கட்டாயம் ஆக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.