விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டு பள்ளியை திறக்க கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிகளை திறந்து வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. விடுமுறை அறிவிக்கபட்ட பள்ளிகளை 11ஆம் தேதி தான் திறக்க வேண்டும். மேலும் சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்தால் மட்டுமே பள்ளிகளை நடத்த வேண்டும். அதுவரை தனியார் பள்ளிகள் திறக்கக் கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.