தனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று பெலாரஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பெலாரஸ் அதிபர் கூறுகையில், எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம். ரஷிய அதிபர் புதினை தனது பெலாரஸ் நாட்டில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமாறு அவர் தான் கேட்டுக் கொண்டுள்ளார். தனது நாட்டின் மீது தாக்குதலோ, ஆக்கிரமிப்போ நடக்க மிகவும் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இதை செய்துள்ளார். இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட ஒரு நாட்டை எதிர்த்துப் போராட எந்த நாடும் முன்வராது என்றும், இவை தாக்குதலை தடுக்கும் ஆயுதங்கள் என அவர் கூறினார். உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையிலும், விரைவில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கும் நிலையிலும் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ததாக பார்க்கப்படுகிறது.