தென்னாப்பிரிக்காவில் பொதுவாக பனிப்பொழிவுகள் ஏற்படுவதில்லை. ஆனால் அங்குள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் திடீர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஜோகன்ஸ்பர்க் நகரில் கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர் பதிவாகி வருகிறது. வீடுகளின் கூரைகள், வாகனங்கள், சாலைகள் ஆகியவற்றில் பனி சூழ்ந்துள்ளது. பெரும்பாலான நகரவாசிகள் பனிப்பொழிவை முதல்முறையாக அனுபவிப்பதால், அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கூறுகின்றனர். அதே வேளையில், தென் ஆப்பிரிக்க வானிலை சேவைகள் அமைப்பின் மூத்த வானியல் அறிஞர் மோபோகிங், “கடல்நீர் மட்டத்திலிருந்து வெறும் 5600 அடி உயரத்தில் இருக்கும் ஜோகன்ஸ்பர்க் நகரில் பனிப்பொழிவு மிகவும் அரிதாக நிகழும். முன்னதாக, 1996 ஆம் ஆண்டிலும், கடந்த 2012 ஆம் ஆண்டிலும் தென்னாப்பிரிக்காவில் பனிப்பொழிவு ஏற்பட்டது. அதன் பின்னர், 2023 ஆம் ஆண்டில் ஏற்படுகிறது. இதன் விளைவாக, கடல் சீற்றம், சூறாவளி காற்று போன்றவை ஏற்படலாம். சாலையோர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்” என்று கூறியுள்ளார்.