கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 71 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனி உரிமை கொள்கைகளை மீறி செயல்படும் கணக்குகளை, ஒவ்வொரு மாதமும் வாட்ஸ் அப் நிறுவனம் நீக்கி வருகிறது. பயனர்களால் ஸ்கேம் அல்லது ஸ்பேம் என்று குறிப்பிடப்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 7182000 இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், பயனர்களால் எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் 1302000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் நிறுவனத்தின் கண்காணிப்பின் பெயரில் இந்த கணக்குகள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பயனர்களுக்கு பாதுகாப்பான சேவைகள் கிடைக்கப் பெறுவதை வாட்ஸ்அப் நிறுவனம் உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.