சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு வீரர் வில் மோர் ஆகியோர் கடந்த மாதம் ஐந்தாம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் 22ஆம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாக அவர்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன. தற்போது 50 நாட்களுக்கும் மேலாக அவர்கள் இருவரும் விண்வெளியில் சிக்கி உள்ளனர். இவர்கள் பூமிக்கு திரும்புவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அமெரிக்க ராணுவ விண்வெளி அமைப்புகளின் முன்னாள் தளபதி ரூடி கருத்து தெரிவித்துள்ளார். அதில் பூமிக்கு விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதை உறுதி செய்ய ஸ்டார் லைனர் விண்கலம் சரியாக நிலை நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். பூமியின் வளிமண்டலத்துக்குள் விண்கலம் நுழையும்போது அந்த முயற்சி தோல்வி அடையக்கூடும். அதோடு விண்வெளியில் விண்கலம் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. வின்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் பூமி அடைவதற்கு முன்பே தீப்பற்றி தெரியும் சாத்திய கூறுகள் உள்ளன. இதனால் விண்கலம் தீப்பற்றி வீரர்கள் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்தார்.