மின்சார விரைவு ரயில் 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்றுக்கு பின்னர் மெதுவான பாதையில் இயக்கப்பட்டன.
திருவள்ளூர்,திருத்தணி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சென்னைக்கு பல்வேறு பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் வேலைக்கு செல்வதற்கு மின்சார ரயில்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை தொற்றுக்குப் பின்னர் இவை மெதுவான பாதையில் இயக்கப்பட்டன. இதனால் வில்லிவாக்கத்தில் இருந்து மூர் மார்க்கெட் வளாகத்தை அடைவதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டு வந்தது. அதனை அடுத்து பயணிகள் புறநகர் மின்சார ரயில்களை விரைவு பாதைகளில் இயக்க வேண்டும் என தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம் இன்று முதல் புறநகர் மின்சார விரைவு ரயில்களை வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதையில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.