முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை வென்று உள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 5% அளவுக்கு விப்ரோ பங்குகள் உயர்ந்துள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் கட்டமைப்பு நிறுவனம் ஒன்று, விப்ரோ நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கியுள்ளது. தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தயாரிப்புகளை விப்ரோ நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும். ஏற்கனவே கடந்த காலாண்டு நிதிநிலை அறிக்கையில் முக்கிய ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக விப்ரோ குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, விப்ரோ பங்குகளை உயரச் செய்துள்ளது.