விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஜட்டின் தலால் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் விப்ரோவில் இருந்து விலகிய அவர், டிசம்பர் மாதத்தில் காக்னிசென்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், விப்ரோ நிர்வாகம், பெங்களூரு நீதிமன்றத்தில் தலால் மீது சிவில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.
விப்ரோ நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை எதிர்த்து, ஜட்டின் தலால் முறையீடு செய்துள்ளார். அவர், வழக்கை நடுவர் மன்றத்துக்கு அனுப்புமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், விப்ரோ நிறுவனத்தில் பல்வேறு உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பலரும் வெளியாகி வருவதால் உயர்மட்ட நிலையில் குழப்பம் நிலவுகிறது.