கடந்த பிப்ரவரி மாதத்தில், சரக்குகள் கையாள்வதில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், 124.03 மில்லியன் டன் அளவில் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது இதுவரை பதிவான பிப்ரவரி மாத சரக்கு கையாளல் அளவில் மிகவும் அதிகமானதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், வருடாந்திர அடிப்படையில், 4.26 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு 3.55% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது கடந்த 30 மாத சரக்கு கையாளலின் உச்சமாக சொல்லப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை படி, நிலக்கரி 3.18 மில்லியன் டன் அளவிலும், உரங்கள் 0.94 மில்லியன் டன் அளவிலும், கையாளப்பட்டுள்ளன. மேலும், இதர சரக்குகள் 0.66 மில்லியன் டன் அளவிலும், கண்டைனர்கள் 0.27 மில்லியன் டன் அளவிலும், போர்ட் ஆஃப் லோடிங் 0.28 மில்லியன் டன் அளவிலும் கையாளப்பட்டுள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில், 5015 எண்ணிக்கையில் வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நடப்பு நிதி ஆண்டில், மொத்தமாக 1367.49 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, 6.93% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.