அனுபவம் இல்லையெனில் அரசு வேலை கிடையாது என கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பிரமோத் சாவந்த், பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன் பலர் கணக்கு மற்றும் பிற பதவிகளுக்காக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். எதிர் காலத்தில் அரசு வேலை ஆட்சேர்ப்பின் போது முந்தைய பணி அனுபவம் கட்டாயம் தேவைப்படும். அரசு வேலைக்கு குறைந்தபட்சம் தனியார் துறையில் ஒரு வருட அனுபவம் தேவை என்றார்.
மேலும், நேரடியாக வேலைகளை வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த 30 ஆண்டுகளாக இருந்த ஆட்சேர்ப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்ற முடிவு செய்துள்ளோம். பட்டதாரிகளும் மற்றவர்களும் தங்கள் தகுதியை மேம்படுத்தக் கூடுதல் படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம் என்று அவர் பேசினார்.