பிரிட்டன்: வாரத்தில் 4 நாட்கள் வேலை சோதனை திட்டம் வெற்றி

February 22, 2023

பிரிட்டனில், கடந்த ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 61 நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இந்நிலையில், இந்த சோதனை திட்டம் வெற்றி பெற்றதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், பல வேறுபாடுகள் உணரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, பணியாளர்கள் தங்கள் வேலை நேரத்தை சராசரியாக அதிகரித்துள்ளனர். மேலும், கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில், ஊழியர்களுக்கு ஏற்படும் காயங்கள், தூக்க […]

பிரிட்டனில், கடந்த ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரை, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 61 நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இந்நிலையில், இந்த சோதனை திட்டம் வெற்றி பெற்றதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், பல வேறுபாடுகள் உணரப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, பணியாளர்கள் தங்கள் வேலை நேரத்தை சராசரியாக அதிகரித்துள்ளனர். மேலும், கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில், ஊழியர்களுக்கு ஏற்படும் காயங்கள், தூக்க பிரச்சனை போன்றவை பெருமளவு குறைந்துள்ளது. எனவே, இந்த திட்டம் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. இந்தத் திட்டம் தொடர்பாக, ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், 10க்கு 8.5 மதிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வணிக உற்பத்தி திறன் மற்றும் செயல்திறன் பிரிவுகளுக்கு 7.5% மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை திட்டத்தில் பங்கேற்ற 91% நிறுவனங்கள் இதனை தொடரப்போவதாக அறிவித்துள்ளன. மேலும், 4% நிறுவனங்கள் இது தொடர்பாக மேலும் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. அத்துடன், 4% நிறுவனங்கள் திட்டத்தை தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu