உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது - ஆய்வுத் தகவல்

உலக அளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ கேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் சம்பந்தப்பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆய்வில், நிகழும் நூற்றாண்டின் இறுதிக்குள் நிலத்தடி நீரின் வெப்பநிலை 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, வடக்கு சீனா, ரஷ்யா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில், நிலத்தடி […]

உலக அளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை உயர்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ கேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் சம்பந்தப்பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆய்வில், நிகழும் நூற்றாண்டின் இறுதிக்குள் நிலத்தடி நீரின் வெப்பநிலை 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, வடக்கு சீனா, ரஷ்யா, வட அமெரிக்கா மற்றும் அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில், நிலத்தடி நீரின் வெப்பநிலை மற்ற பகுதிகளை விட அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. நிலத்தடி நீரின் வெப்பநிலை உயர்வது சுற்றுச்சூழல் அமைப்பில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், நிலத்தடி நீரின் வெப்பநிலை உயர்வது தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu