சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ரகு ரெட்டி, இந்தியாவில் நிலவும் நெருக்கடி சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சியோமி நிறுவனத்தின் மீது, அண்மையில், இந்திய அமலாக்கத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், விவோ கைபேசிகள் ஏற்றுமதியை இந்தியா முடக்கியுள்ளது, சியோமி உட்பட பல சீன நிறுவனங்களை கலக்கமடைய செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம், இந்தியாவில் முன்னணி நிறுவனமாக உயர, ரகு ரெட்டி பெரும் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ராஜினாமா தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேறு நிறுவனங்களில் உள்ள வாய்ப்புகளுக்காக ரகு ரெட்டி ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.